Thursday, December 16, 2010

Alix Olson's Gender Game lyrics

You wanna give me a shiner
Cause I look like this
And I got a vagina?
See, I'm familiar with this Gender Game,
I've played this war many times before
On this playground called my identity
When puberty hit like dodge balls
And freeze-tagged as sissy-fagged
My best friend dissed me- common interests,
Different anatomy.

See, vagina meant quieter, caretaker, peacemaker.
Vagina meant keeping lips closed, keeping bodies posed.
Vagina was silent dolls and no action toys,
Vagina was punches when I played with the boys.
So I learned to take it in the stomach, I learned to Fight to make friends.

And as I learned to make that bullshit end,
Vagina became a slippery slide for my little finger
Vagina became a quiver that lingered,
Vagina became what I looked for, worked for, stood for,
I "Viva La Vagina'd all over the place!"
I revitalized Vagina's grace, I discovered vagina's taste.
I became a fine diner. Put my face in vagina after vagina.

And then I was faced with some other lipservice
Putting me in my place
That Vagina should not be liberator.
But dictator.
Of the shoes we wear. The hair we crop.
The palms we clasp. The way we walk.
The space we use. The threads we choose.
Well, I refuse to follow suit.
Cause I gotta confess, my straight jacket is a dress.
You know it used to be a crime
To wear clothes that didn't scream
"Vagin-A!"
I wear these shoes so I can move with my own easy spirit.
I don't shave my legs cause
It gets cold. Besides, my legs rebel
Against the bloody hell of
Shaved and sliced
And since when is my body hair something to judge?
Is furry a male privilege-
Or a patriarchal plot by gillette?
I don't cut my nails cause I've got hammering to do.
I'm pounding out my path as I cruise this gender landscape,
As I peruse the choice between silence and
Violence.

From http://www.lyricsmania.com/gender_game_lyrics_alix_olson.html
Matthew Shepard was bent, so you hang him to a fence,
Brandon Teena was murdered as a liar for hiding his
Vagina. And I can't even sit
In a restaurant without causing a stir:
"Whaddya have sir? Whaddya have sir? Whaddya have sir?"
I have a Vagina!

Yes, I've got a vagina and you can still call me sir,
Cause I can't cure
This visual disease of yours.
But I don't give a damn about "Sir" or "Ma'am".
So, in the "F" or "M" boxes they give,
I forgive myself for not fitting in
And blame the world for lack of clarity.
I deliberate.
Penis? I got one y'know. I write down "d" for dildo,
I write down "D" for
"Don't know," I fill in "F" for
fi-fie-foe male!
Yes, I'm a giant Vagina!
And I am too big for these boxes they give,
Too real for this Gender Toyland
Built over soiled contradictions
With Barbie bricks and Ken cornerstones
Built over the skulls and bones of our Transgendered Ancestors.
Danger:
She-men working above. And beyond. You.

Yes, we are Deconstruction Workers.
We are exposing unfounded bedrocks
That bed us to one sex, that wed us to one gender.
We are overturning those stones,
We are throwing them back.
We are making revolution
A gender evolution.
We are invoking strategy, we are revoking shame.
And we are calling it. We are calling it
Refusal to be Named.



[ These are Gender Game Lyrics on http://www.lyricsmania.com/ ]

Wednesday, December 15, 2010

Poet for the People: An Interview with Alix Olson

Alix Olson (born 1975 in Bethlehem, Pennsylvania) is an American poet who works exclusively in spoken word. She graduated from Wesleyan University in 1997 and uses her work to address issues of capitalism, sexism, homophobia, heterosexism, transphobia, misogyny, and patriarchy. She identifies as a lesbian, socialist feminist.



In-step
November 1, 2001

Poet for the People: An Interview with Alix Olson
By Stacy Szymaszek
The creating Change conference organizers made an astute decision when they invited spoken word poet Alix Olson to perform. She understands that her task as an artist included a commitment to social change, and the issues she addresses in her poems and in her activism are essential to the fight for a democracy with integrity. Since we are both writers, this interview was conducted by e-mail.

SS: I heard that since September 11th you and other artist have been meeting. What kinds of things are you talking about and doing?

AO: I’m luck y to be surrounded by communities of artists/activists who are using this tragic global moment as a time to analyze international politics, and re-create a world in which we might all be safer. I’m very saddened by the targeting of thinking/critical people as somehow being ‘traitors’ to freedom and the American way. I am hopeful that there are enough of us who believe that it is only by moving peacefully and carefully within these times that we will find our way out of this mess. The last meeting I went to was last week (which was a New Yorkers Say No To War meeting at our NYC LGBTQ Center) featured a speaker from the ACLU discussion the number of "foreign-looking and sounding people" who have been illegally detained and deported. There are street actions and protests being planned, literature being distributed, and mostly—networking happening. New York City is so big and diverse that it’s heartening to watch people fiend each other.

I think political artists are also at risk – I have heard that the government has shut down Rage Against the Machine’s website. So, that’s something I keep at the back of my mind. Art is considered a threat because it is a very effective tool for education, coalition-building and mass-energy building.

Our government is heading towards Sparta-status, just bulldozing through the Middle East, trampling on our civil liberties, conflating American with freedom conflating freedom with G-d, suppressing necessary debate by limiting media exposure—and all of this with their own interests in mind—while the people who care deeply about the world’s future are overwhelmed with the number of facets at stake here, the number of countries, people, issues, to be concerned about.

The National Organization for Women just filmed me, and four other feminists (eve ensler, Kathy najimy, Rebecca walker) for documentary on " The F-word (feminism) and I did begin to think and talk a little about the gendered nature of all of this: women watching in horror as men kill men, our former baseball club owner president treating this a little like a big sporting event, huge flags on pickup trucks everywhere like it’s high school football pep rally, women in Afghanistan clutching their babies as the boys go off to try to defend the little that is left of their devastated country. It’s strange that gender is rarely talked about in the context of these things: maybe it’s so obvious we don’t’ really even see it?

In terms of performance, I’m really just trying to document what I see right now, as well as read everything I can get my hands on—from places like RAWA (Revolutionary Association of Women for Afghanistan) to Z-Net, from Noam Chomsky to Barara Ehrenreich, just trying to get the full picture from the progressives that I admire. Trying to educate myself about the whole history of this culminating disaster. Hopefully, I can share what I learn and consider through my art in the coming months. I’m looking forward to these performances that are upcoming; I think people being together, feeling secure in an insecure time by just being together in a vibrant, political performative setting, will be good for all of us. I think we need to get away from our t.v. sets and find places to gather: read, think, discuss, perform together. I’m excited to be a part of that for people to do my piece.

SS: I’ve heard many poets express feeling of futility amidst our national crisis (or like Poet Laureate Billy Collins, speak of poetry as a comfort or refuge). Have you had moments of doubt about the power of language to create social change?

AO: I never doubt the power of language to change the world. I have a deep faith in verbal communication, in the ways that art has always moved people to a place unreachable by most other things. However, I do worry about who has access to language, who is granted the tools of literacy to begin with, who has the outlets, the means and production of ra4ching people on a mass level. For example, grassroots political artists, are, by the nature of our non-mainstream media ideologies, confined to more limited venues. This can be a problem.

SS: Did poetry and activism naturally synthesize for you? Was there ever one without the other?

AO: I have always been passionate about poetry, always loved rolling words that sound alike in my mouth together, I’m in awe of the verbal toolbox we have access to, concerned we don’t use it more. Performance was my true passion, feeling an audience settle in together to experience something intimate. Now, when my audience and I laugh together or feel something sad together, there is nothing else I can imagine doing with my life. Poetry is the performance technique I choose because poetry is what happens when my brain squints and focuses on the world. Politics, for me, was never about a laundry list of things I believed in, never about issues per se. More about egalitarianism and meeting peoples’ basic needs and caring about each other’s well being the way we care about our own world makes the world such a more fulfilling place to pass our time on this planet. Then, you develop the laundry list!

SS: After I went to a Chicago King’s show, and was raving about it, I found that people I thought were "in the know" had only a faint idea of what a drag king is. Why is transgenderism/gender play still met with such popular naiveté at best, intolerance at worst?

AO: It has been hard to convince this society/culture of the basic feminist assumption that women should even be allowed into the larger pre-existing structure, but it’s happening. Now, our most radical gender assertion, it seems to me, is that we must tear down that whole structure and re-envision a new world not based on gender/biological sex/sexuality, at all. Rainer Maria Rilke urges us to "be conversant with transformation".

This is scary and disconcerting for many people. We live in an unpredictable world, where boxes, labels, and groups are comforting. Unfortunately, where these are categories, there are people with the power to name those categories—and the rest of us. So, I think that gender transgressors are among the most brave people in the world. Often, when those of us who critically and emotionally are forces to re-evaluate our gender, sexuality, we are also given the opportunity to think hard about other ‘givens’.

I think that gender play is ignored by larger mass media outlets because it throws a very given structure with assumptions based on biology up for grabs. Folks at the top of the power structure do not want us to start questioning ANY given structures—capitalism, race relations, etc… otherwise, we might start demanding having a say in how to re-construct them. This is a deep belief of mine.

My Feed the Fire cohort, Neeve, is a New York City drag kind (named Pat Riach) who, with her drag king partner, tackles some very serious political issues surrounding global patriarchy (sexuality within the church, masculinity and war among them). But, all these ideas are confronted in a sexy, spirited, loving way, which is the best way to ask people to listen. It is always important to us a Feed the Fire to remember that these issues are scary for all of us, and that courage is best amassed while working in congruence and thorough compassion.

Leslie Feinberg, someone I admire greatly, calls this ‘developing a vocabulary of persuasion’. I try to remember the value of that.

SS: What are you most passionately working on now?

AO: Passionately engaged with other peoples’ words, scrambling to catch up on alternative media, and garnering all of my hope into a big ball of good fire, so that I may help myself and hopefully others, to continue on with the very necessary, difficult, and ultimately gratifying cultural work of these hard times.

SS: Is there anything else you would like Milwaukee to know about?

AO: Just that I have a new cd out Built Like That a book built like that: the word will be released soon, new t-shirts, posters and all kinds of goodies to help spread the word. I’m also looking for another booking agent! Thanks for the opportunity. See you soon!



Courtesy:
www.alixolson.com

Tuesday, November 9, 2010

நீள்கூந்தலும் நிலந்தேய ஆடைகளும்

தர்மினி

நன்றி: www.thoomai.wordpress.com



இன்று வரை தமது கலாச்சாரப் பண்பாட்டுப் பிரதிநிதிகளாகப் பெண்களை வைத்திருப்பது, ஆண்களுக்கும் , அதிகாரத்திற்கும் வசதியாகவேயுள்ளது. நீள்கூந்தலும் நிலந்தேய உடைகளுமாக நடமாட நம் போலித்தனமான சுற்றம் வெருட்டுகின்றது.

கலாச்சாரக் காவிகளாகப் பெண்கள் மட்டுமே உடையலங்காரம், தலையலங்காரம், பண்பாடு என்ற பெயரில் பழமை பேணுதல் , பாசாங்கான புறவடையாளங்கள், அச்சமூகத்தின் பிரதிநிதிகளாகப் பெண்கள் இருக்கவேண்டுமெனக் கதைத்தல்கள், கட்டளைகள் என்று மதம், குடும்பங்களினூடாக வற்புறுத்தப் படுகின்றது.

பிரித்தானியக் காலனியின் கீழ் படிப்பு, பதவி , நாகரிகம் என்பவற்றைக் காரணங்களாகக் கொண்டு உடைகள் ,தலையலங்காரம் ,காலணிகளை ஆண்கள் மாற்றிக் கொண்டதைப் போல பெண்கள் நவீனத்துவத்தைக் கடைப்பிடிக்க சமூகம் விடவில்லை. இன்று வரை தமது கலாச்சாரப் பண்பாட்டுப் பிரதிநிதிகளாகப் பெண்களை வைத்திருப்பது, ஆண்களுக்கும் அதிகாரத்திற்கும் வசதியாகவேயுள்ளது. நீள்கூந்தலும் நிலந்தேய உடைகளுமாக நடமாட நம் போலித்தனமான சுற்றம் வெருட்டுகின்றது. காலமாற்றத்திற்கும் காலநிலைகளுக்கும் மாறிக் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயங்கள் கூட புலம் பெயர்ந்து மற்றைய சமூகத்தினருடன் கலந்து வாழும் போதும், தாய்நாட்டில் வாழும் போதும் ஏற்பட்டாலும் கடவுளை மறுக்க நடுங்கும் மிரட்சி போல, பழகி விட்ட ஒன்றை விட்டுவிடுதலில் தோன்றும் பூதம் தின்று விடும் என்ற சின்னப்பிள்ளைத் தனமான பயத்தைப் போன்றததுமாகும். தங்களுக்குக் கொஞ்சங் கூடப் பிரயோசனம் அற்றதும் வீண்வேலைகள் என அறிந்தும் இவர்கள் அவற்றைப் பின்பற்றுகின்றனர்.

சமீபத்தில், இந்துசமயத்தையும்-பண்பாடு கலாச்சாரத்தையும் போலி யாழ்ப்பாணக் கலாச்சாரக் காவலாளர்களும் சட்டம் போட்டுக் காப்பாற்றும் வரலாற்றுக் கடமையைச் செய்கிறார்கள். இந்த ஆக்கம் அதைப்பற்றிப் பேசாமல் அதைத் தொட்டு புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் போலிக் கலாச்சார மினக்கெடல்கள் பற்றிக் கொஞ்சம் கதைப்பதாக இருக்கும்.

உண்மையாகவே மனமகிழ்வை அளிக்கும் செயல்களிலோ உடலைப் பேண உதவும் உடைகளிலோ ஈடுபாடு காட்டாமல் வெற்றுச் சம்பிரதாயங்கள் , சடங்குகள், பழக்கவழக்கங்களைக் காவிக் கொண்டு வந்து புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் நேரம், பணம்,சக்தி என்பவற்றை விரயஞ் செய்கின்றனர் தமிழர்கள். இவர்கள் மற்றைய சமூகத்தினரிடம் பெருமையாகச் சொல்லிக் கொள்ளத் தம் பாரம்பரியக் கலைகள் எதையும் கைவசம் வைத்திருப்பதில்லை. இங்கு பிறந்து வளரும் தமிழ்ச் சமூகத்துக்குக் கற்பிக்கும் இசை,நடனம், கவின்கலைக் கருவிகள் கூட ஒருவருக்கொருவர் கௌரவப் பிரச்சனை, போட்டி மனப்பான்மையுடன் தம் பிள்ளைகளுக்குக் கற்பித்தலிலும் ஒரு அரங்கேற்றத்துடனும் முற்றுப் பெற்று விடுகின்றன. அவற்றை உள் வாங்கி வெளிப்படுத்த முடிவதில்லை.

அவர்களை
விட்டுவிட்டால் புலம் பெயர்ந்து வாழத் தொடங்கிய முதற் தலைமுறையினர் எங்காவது ஒரு சமூக ஒன்று கூடலில் தங்களுடைய நாட்டுக் கலை என எதையும் நிகழ்த்த முடியாமல் திண்டாடி நிற்பதைப் பார்க்கலாம். ஆனால் தமிழர், தமிழ்க் கலாச்சாரம் ,பண்பாடு என வெறும் பேய்க்காட்டல்களை வைத்துக் காலந்தள்ளிக் கொண்டிருப்பது பற்றிச் சற்றும் வெட்கப் படுவதில்லை.
சமீபத்தில் நடைபெற்ற பல சமூகத்தினருக்குமான கலைகலாச்சார ஒன்றுகூடலில் நடைபெற்ற சம்பவமொன்று.

ஒவ்வொரு நாட்டவர்களிலும் யாராவது ஒருவர் நமக்குப் புதியதாக இருக்கும் அவர்களது பாரம்பரியப் பாடலைப் பாடினார்.தாளலயம் மிகுந்த இசையும் ,குழுக்களாக அவர்களது தனித்துவமிக்க நடனங்களும் எல்லோராலும் இரசிக்கப் பட்டது. தமிழர்களின் முறை வந்த போது பிறநாட்டவரைப் போன்ற பாரம்பரியப் பாடல்களையோ நடனத்தையோ வெளிப்படுத்தவில்லை. கைவிரல்களினால் எண்ணக் கூடிய அளவிலேயே நம் நாட்டார்பாடல்களையும் கூத்தையும் இசைக்கக் கூடியவர்கள் புலம்பெயர்ந்தவர்களுக்கிடையில் இருக்கக் கூடும். ஏனைய சனங்களுக்கு அக்கலைகள் எதுவும் தெரியாது. அவர்கள் காவிக் கொண்டு வந்தவை ; சாறி, சாமத்தியச் சடங்கு, பொட்டு, புட்டு, ஒடியற்கூழ், காசு உழைக்கும் கோயில்களும் தான். வீண் வெளிவேடங்களில் நேரத்தைக் காசைச் செலவிடும் எங்களால் உண்மையாகவே ஒரு தனித்துவமான கலையைக் காட்சிப்படுத்த முடிவதில்லை. எதையும் கற்றுக் கொள்ளாதவர்களாகவே இருக்கின்றோம்.

இந்தியத்
தமிழ்ச் சினிமாப் பாடல்களோ, அவற்றைப் பார்த்த விளைவால் ஆடும் மேலைத்தேய நடனங்களோ ஏனைய நாட்டவர்கள் மத்தியில் பாராட்டைப் பெறுவதில்லை. ஒருவர் துள்ளிசையான தமிழ்ச் சினிமாப் பாடலைப் பாடிய போது ஸ்பானிஷ் இசையின் சாயல் அடிப்பதாக அவ்விடத்திலேயே சுட்டிக்காட்டியதும் நடந்தது. அவர்களுக்குத் தமிழ் மொழி தெரியாது என்ற காரணத்தினால் ஓர் சினிமாப்பாடலைப் பாடி ஏமாற்ற முடியாது. அவை பாரம்பரியக் கலைகளினின்று விலகி நிற்பது இலகுவாகப் புலப்பட்டுவிடும்.

அங்கே
கையில் எழுதி வைத்திருந்த பாடலொன்று தமிழ்ப் பெண்கள் ஐந்து பேரால் பாடத் தொடங்கப்பட்டது. அனைவரும் நாற்பத்தைந்து ஐம்பது வயதை அண்மித்தவர்களாகவே இருப்பார்கள். நான் இவர்களை விட்டுச் சற்றுத் தூரத்தில் அமர்ந்திருந்தேன். சுராங்கனி….சுராங்கனிஎன்ற பாட்டைத் தவிர என் வாயிலும் ஒன்றும் வரவில்லை என்று குழம்பிக் கொண்டிருந்தேன். அவர்கள் என்ன பாடலைப் பாடிக் கொண்டிருக்கின்றனர் என்பதையே பாடலைப்பாடும் இசையை வைத்துக் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் , ஐந்து பேரிடமும் சிக்குப்பட்டு மாம்பழமாம்மாம்பழம் என்ற வார்த்தைகள் வெளிவருவது காதுகளில் தெளிவாக விழுந்தது. அவர்கள் பாடிய விதம் சின்னவயதில் தடக்கித் தடக்கிப் பாடும்மாம்பழமாம் மாம்பழம் மாமா தந்த மாம்பழம்போன்றிருப்பதாக என் ஊகம்.

ஓகோ! இவர்களும் என்னைப் போலவே வெறுத்துப் போய் வெட்கித்துத் தம்மை தாமே கிண்டல் செய்து பாடுகின்றார்களோ என்ற நினைப்பில் அவர்களுடன் சேர்ந்து அப்பாடலைப் பாடும் ஆசையுடன் எழுந்தோடினேன். இப்படிக் கிண்டலாகவாவது பாடச் சிந்தித்திருக்கிறார்களே என்று ஒரு புறம் அவர்களிடம் மதிப்பும் ஏற்பட்டது. அப்பாடலில் புதிதாக நுழைக்கப்பட்ட வார்த்தைகளை எழுதி வைத்திருக்கிறார்கள் என நினைத்து அந்தக் கடதாசியில் எழுதியிருந்தவற்றைப் படித்த போது தான் உண்மையாகவே அது என்ன பாடலென அடையாளங் கண்டு கொண்டேன். போன வேகத்தில் திரும்பி ஓடிவந்து என் பழைய இடத்தில் இருந்து விட்டேன்.

அது போக்கிரி படத்தில் விஜய்,அசின் வாயசைத்துப் பாடி ஆடிய , ‘மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் .சேலத்து மாம்பழம் நீதானடி! ‘ அந்தப் பாட்டின் மெட்டையாவது சரியாகப் பாடியிருந்தால் அல்லது வார்த்தைகளைத் தெளிவாக உச்சரித்திருந்தால் நான் ஏமாந்து போயிருக்க மாட்டேன்.

இவ்வாறு தான் நம் போலிக் கலாச்சாரக் கதைகள் இருக்கின்றன. மக்கள் உள்வாங்கித் தம் திறமைகளை வெளிப்படுத்தவோ எதுவுமில்லை. மனமகிழ்ச்சியளிக்கும் பாரம்பரியக் கலைகளைக் கலைஞர்களை அழித்து விட்டும் அக்கறையற்றும் இருப்பது பற்றி உணராமல் பெண்களை முடக்கும் சடங்குகள், பழக்கங்கள், பண்பாடு எனப் பாதுகாக்கச் சட்டம் போடுவதும் சதிசெய்வதும் சிறிதும் தவறாகப் படுவதில்லை என்பது தான் வருந்தச் செய்கிறது.

கவியாளுமைகள் - “கமலாதாஸ்” என்னும் எழுத்து

செந்தமிழ்மாரி

நன்றி: www.thoomai.wordpress.com

ஆணுலகைச் சார்ந்து செயல்படும் சமூக பிற்போக்குகளை எதிர்த்தும் பெண் குறித்த கருத்தாக்கங்களைக் கேள்விக்குட்படுத்தியும் எழுதும் அவரது படைப்புகளை இந்தச் சமூகம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. ஆண்களால் கட்டமைக்கப்பட்ட பெண் சார்ந்த மரபுகளை எதிர்த்துப் பேசுவதும், எழுதுவதும், நடந்துகொள்வதும் என்றிருந்த அவர் ஒரு கலக்ககாரியாக அறியப்பட்டார். இதனால் தாம் பிறந்த மண்ணைவிட்டு வெளியேறும் நிலைக்கும்கூடத் தள்ளப்பட்டார்.

கவிதைகள் எழுதுவது என்பது ஒரு தவத்தைப் போன்றது. ஒரு அறிஞர் சொல்கிறார் குழந்தைகளுக்கும் கவிஞர்களுக்கும்தான் வாழ்வு இனிமையாக இருக்கிறது என்று. அதைப்போல காண முடியாத அல்லது எண்ண முடியாத பாதையைக் கண்டடைந்து அதில் ஊறித் திளைக்கும் கவிஞர்களுக்கு வாழ்வு பெரும் அர்த்தத்துடன்தான் விளங்குகிறது. அன்று முதல் இன்றுவரை கவிதையைக் கண்டடைந்தவர்கள் ஏராளம் பேர்.பெரிதும் அறியப்பட்டவர்கள் ஆண்பாற் புலவர்களே. தொடக்க காலம் முதலே பெண் கவிஞர்கள் உருவாவதை இருட்டடிப்பு செய்துள்ளனர் என்பதை நாம் அறியும் சங்ககாலக் கவிதை தொடங்கி அறிந்துகொள்ள முடிகிறது. அதையும் மீறி மிகுந்த சிரமங்களுக்கிடையில் சங்ககால பெண் கவிஞர்களான காரைக்காலம்மையார், வெள்ளிவீதியார், ஒளவையார், ஆண்டாள் போன்ற ஒரு சிலர் மட்டுமே அறியப்பட்டு கொண்டாடப்பட்டுள்ளனர்.

இருபதாம் நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் பெண்களின் எழுத்தையே அதிகமாகக் காண முடிந்தது. அதிலும் 1990க்குப் பிறகான காலத்தில்தான் பெண் கவிஞர்களின் வரவு அதிகரித்ததன என்று கூறலாம். அப்படி வந்த கவிஞர்களும் அவர்களுக்குள்ள கட்டுப்பாடுகளோடு இறைவனையும், அழகையும் வர்ணித்தே கவிதையெழுதினர். புதுமைக் கவிஞர்களுக்கு பிறகு பின் நவீனத்துவ காலக் கவிஞர்கள் 1990களின் கடைசியில் வந்து, இன்றைக்கு ஆண் கவிஞர்களின் எண்ணிக்கையோடு மட்டுமல்ல கவிதைத் திறனோடும் போட்டி போடும் அளவுக்கு அவர்களின் நிலை வளர்ந்துள்ளது. ஒரு பெண் கல்வி பெற்றால் அந்தக் குடும்பமே கல்வியில் சிறந்து விளங்கும் என்பதைப் போல்தான் பெண் கவிஞர்களின் வரவு எதிர்கால சந்ததியினருக்கும் சமூகத்துக்கும் உதவும் வகையில் அவர்களின் ஆளுமைத்திறனும் சுதந்திரங்களை அடையும் குணங்களும் வித்திடுகிறது.

எனவே இது வரவேற்கத்தக்க ஒரு நிகழ்வு. இன்று அவர்கள் பல பொருள்களில் தனிமனித சுதந்திரம், அவர்களுக்கு வரையறுக்கப்பட்ட சமூகக் கட்டமைப்புகள், பெண் உடலின் மீது செலுத்தும் ஆதிக்கம், மனதிலேற்படுத்தும் ஆதிக்கங்கள் போன்றவற்றைத் தகர்த்து கவிதை புனைந்து வருகின்றனர். இருந்தாலும் ஆண் கவிஞர்களின் உடல் சார்ந்த கருத்துக்களை ஏற்றுக்கொண்டு இச்சையூறும் இச்சமூகம் பெண்களின் உணர்வுகளை, உள்ளக் குமுறல்களைக் கவிதையாக்கிக் கொணரும்போது மறுக்கும் நிலைதான் நீடிக்கிறது. இது இச்சமூகம் வளர்வதற்கான சூழல்தானா என்ற கேள்வியை எழுப்பத் தவறியதில்லை. இருப்பினும் இவற்றையெல்லாம் எதிர்கொண்டு பெண்கள் தங்கள் கருத்துக்களை ஆணித்தரமாகக் கவிதை மூலம் செயல்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

எத்தகைய அடக்குதல்கள் வந்தாலும் பெண்கவிகள் அவர்களுக்கான பங்களிப்பை கவிதைகளால் மட்டுமல்ல பெண் சுதந்திரம், பெண்களின் தனித்த வளர்ச்சி, தனித்த ஆளுமை இன்னும் பிறவற்றால் இந்தச் சமூகத்தில் தங்களாலான மாற்றங்களை நிகழ்த்திக்கொண்டுதானிருக்கிறார்கள். அத்தகைய பெண் கவிஞர்களைப் பற்றிய ஒரு கண்ணோட்டம்தான் இந்த ‘கவியாளுமைகள் ‘

கமலாதாஸ் என்னும் எழுத்து

கமலாதாஸ் இன்று மரணமடைந்துவிட்டாலும் அவர் எழுதிய எழுத்துக்கள், கவிதைகள் அனைத்தும் சமூக அளவீடுகள், மதிப்பீடுகளை மறுத்தும் கேள்வி கேட்கவும் செய்யும் காத்திரமான படைப்புக்களாகவே இருந்துவருகின்றன. இவர் வாழும் காலத்திலேயே பலவிதமான விமர்சனங்களால் அலைக்கழிக்கப்பட்டும், இறப்புக்குப் பின்னரும் பலவிதமான விமர்சனங்களுக்கும் ஆட்பட்டார். இருந்தும் அவர் வாழும்வரை இழக்கமுடியாத எழுத்தாகவே வாழ்ந்தார் என்பதுதான் உண்மை.


1934ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் நாள், கேரளத்திலுள்ள திருச்சூர் அருகிலுள்ள நாலாப்பட்டு தறவாட்டில், மலையாள பத்திரிகையான மாத்ருபூமி நாளேட்டின் நிர்வாக ஆசிரியரான வி.எம்.நாயர் என்பவருக்கும், உலகெங்கும் கவிதையால் அறியப்பட்ட கவிஞர்

பாலாமணியம்மாவிற்கும் மகளாகப் பிறந்தவர். கருவிலேயே கவிதையைக் கண்டடைந்தவர். அதனால்தான் கவிதையில் இவ்வளவு ஜொலிக்க முடிந்ததோ? சிறுவயதில் ஆமி என்ற பெயரால் அழைக்கப்பட்ட கமலாதாஸ் மலையாளத்தில் மாதவிக்குட்டியாகவும் ஆங்கிலத்தில் கமலாதாஸாகவும் பெரிதும் அவருடைய எழுத்துக்களால் அறியப்பட்டவர்.

தன்னுடைய 14ஆம் வயதில் மாதவ தாஸுக்கும் இவருக்கும் திருமணம் நடந்தது. எழுத ஆரம்பித்தபோது அவரது கணவர் அதற்கு பெரும் உதவியாக இருந்தார் என்பதை அவரே குறிப்பிட்டுள்ளார். முதல் கவிதைத் தொகுப்பான ‘சம்மர் இன் கல்கத்தா’ (Summer in Calcutta) என்ற ஆங்கில நூல் ஆசியாவுக்கான கவிதைப் பரிசினை பெற்றதே அவருடைய எழுத்தின் வீர்யத்துக்கு உதாரணம். அந்தப் பரிசு வழங்கப்பட்டபோது அவருக்கு வயது 31 (1965ஆம் ஆண்டு).

1976ஆம் ஆண்டு வெளியான இவருடைய ‘என் கதை’ என்ற தன்வரலாற்று நூல் இந்தியாவிலேயே மிக அதிகமாக விற்பனையானது. இந்தப் புத்தகம் கற்பு, கலாச்சாரம் போன்றவற்றைப் பற்றி அதிகமாகப் பேசுவதாகவும் நமது ஆச்சாரவாதிகளால் மிகையான பாலியலைப் பேசியதாகவும் கண்டனம் எழுப்பப்பட்டாலும் வெகுசன வாசகர்களால் வாசிக்கப்படும் குமுதம் வார இதழில் தொடராக வந்து வரவேற்பைப் பெற்றதே அந்த நூலின் மதிப்பைக் கூட்டுகிறது.

ஆச்சாரவாதிகளால் அந்நூலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டபோது அவரிடம் ‘என் கதையைப் படித்து பலரும் அதிர்ந்துபோனதாகச் சொல்லப்படுகிறதே…’ என்று ஒரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்பியபோது, ‘அதிர்ந்து போனதுபோல பாசாங்கு செய்தனர்’ என்று துணிச்சலாகக் கூறி அனைவரையும் திணறடித்தார். அந்த பதில் அவரது ஆன்மாவின் அடியாழத்திலிருந்து வந்த பதிலாகவே அமைந்திருந்தது என்றே கூறலாம். இதிலிருந்து ‘நாம் புனிதமானவர்கள், கண்ணுக்குத் தெரியாத வரையறைகளுக்குக் கட்டுப்பட விதிக்கப் பட்டவர்கள்’ போன்ற பொய்மைகளைத் துகிலுரிந்து காட்டினார்.

எழுதுவதைப் பற்றிப் பேசும்போது “என் வாழ்வின் இரகசியங்கள் எல்லாவற்றையும் எழுதி என்னைக் காலி உடம்பாக ஆக்கிவிடவேண்டும் என்பதற்காகவே எழுதுகிறேன்” என்றார். இதிலிருந்துதான் அவரது கவிமனம் எதைக் காண அல்லது எவற்றை அடைய கவிதையையும் எழுத்தையும் தேடுகிறது என்பது புரிகிறது. உடலாகட்டும் இன்னபிறவாகட்டும் எதுவாக இருந்தாலும் தான் எழுத நினைத்த யாதொரு கருத்தையும் எழுதி முடிக்கவே அவரது உள்ளம் நாடுவதாக இருந்தது. இதனால் கமலாதாஸ் அன்று முதல் அவரது இறுதிக் காலம்வரை குழப்பவாதியாகவும், தத்தளிக்கும் மனோநிலையுடையவராகவுமே சித்தரிக்கப்பட்டார்.

  • ஆணுலகைச் சார்ந்து செயல்படும் சமூக பிற்போக்குகளை எதிர்த்தும் பெண் குறித்த கருத்தாக்கங்களைக் கேள்விக்குட்படுத்தியும் எழுதும் அவரது படைப்புகளை இந்தச் சமூகம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. ஆண்களால் கட்டமைக்கப்பட்ட பெண் சார்ந்த மரபுகளை எதிர்த்துப் பேசுவதும், எழுதுவதும், நடந்துகொள்வதும் என்றிருந்த அவர் ஒரு கலக்ககாரியாக அறியப்பட்டார். இதனால் தாம் பிறந்த மண்ணைவிட்டு வெளியேறும் நிலைக்கும்கூடத் தள்ளப்பட்டார்.

  • 1999ஆம் ஆண்டு இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறினார். அவர் தனிமையில் வெகுகாலம் இருந்தபோது அன்பைத் தேடி சந்தித்த நபரின் அன்பைத் தேடியே மதம் மாறியதாகக் கூறினார். அந்த நபர் தன்னளவுக்கு துணிச்சலற்றவராக இருந்தது தெரிந்தும் அந்த மதத்திலேயே கடைசிவரையிலும் நீடித்தார். அன்பில்லாத மதங்களின் தன்மைகள் சலித்துப்போய் ‘கிருஷ்ணராக இருக்கட்டும், இஸ்லாத் ஆக இருக்கட்டும் எல்லாக் கடவுளும் ஒன்றே’, ‘மனித அன்பு ஒன்றே சிறந்தது‘ என்றும் உணர்ந்து அறிவித்தார்.

1984ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கான பட்டியலில் டோரிஸ் லெஸ்ஸிங் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களோடு இவரது பெயரும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஆசியாவுக்கான கவிதைப் பரிசு, கென்ட் அவார்டு, அசான் உலகப் பரிசு, எழுத்தச்சன் புரஸ்கரம் விருது, சாகித்ய அகாடமி விருது மற்றும் கேரள சாகித்ய அகாடமி விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை இவரது எழுத்துக்கள் பெற்றிருக்கிறது.

கமலாதாஸ் என்னும் அந்த எழுத்து ஒரு கவிஞராக, எழுத்தாளராக மட்டுமல்லமல் ஒரு தேர்ந்த ஓவியருமாகயிருந்தார். அவர் வரைந்த ஓவியங்கள் அனைத்தும் பெண்ணின் அடுத்தகட்ட அல்லது தன்னுணர்வை நோக்கிப் பயணிப்பதை தெள்ளன விளக்குவதாகவும் மிகுந்த அழகியலோடும் அறியப்பட்டது. அதேபோல் ஆண்சார்ந்த ஓவியங்களையும் தீட்டியுமுள்ளார்.
அதில் ஓர் ஓவியத்துடன் அவர்,


எழுதியுள்ள படைப்புக்கள்
English
1964: The Sirens (Asian Poetry Prize winner)
1965: Summer in Calcutta (poetry; Kent’s Award winner)
1967: The Descendants (poetry)
1973: The Old Playhouse and Other Poems (poetry)
1976: My Story (autobiography)
1977: Alphabet of Lust (novel)
1985: The Anamalai Poems (poetry)
1992: Padmavati the Harlot and Other Stories (collection of short stories)
1996: Only the Soul Knows How to Sing (poetry)
2001: Yaa Allah (collection of poems)
Malayalam
1964: Pakshiyude Manam (short stories)
1966: Naricheerukal Parakkumbol (short stories)
1968: Thanuppu (short story, Sahitya Academi award)
1987: Balyakala Smaranakal (Childhood Memories)
1989: Varshangalkku Mumbu (Years Before)
1990: Palayan (novel)
1991: Neypayasam (short story)
1992: Dayarikkurippukal (novel)
1994: Neermathalam Pootha Kalam (novel, Vayalar Award)
1996: Chekkerunna Pakshikal (short stories)
1998: Nashtapetta Neelambari (short stories)
2005: Chandana Marangal (Novel)
2005: Madhavikkuttiyude Unmakkadhakal (short stories)2x
2005: Vandikkalakal (novel)

தொடர்ந்து இயங்கி வந்த அவரது எழுத்தாளுமை கடந்த மே மாதம் 31ஆம் தேதி, எழுபத்தைந்தாவது வயதில் புனே மருத்துவமனையில் ஓய்ந்தது. இலக்கிய உலகத்துக்கே ஓர் இழக்கக் கூடாத இழப்பு. அவர் மறைந்தாலும் அவரது எழுத்துக்கள் என்றென்றும் நம்மோடு பேசிக்கொண்டுதான் இருக்கும்.

கமலாதாஸ் கவிதை
மொழியாக்கம்: எஸ்.வி.வி.வேணுகோபாலன்

அரசியல் தெரியாது எனக்கு
ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்களின்
பெயர்கள் தெரியும் எனக்கு.
நேருவில் துவங்கி
வரிசையாக ஒப்புவிக்கவும்முடியும் என்னால்
கிழமைகளை, மாதங்களைச் சொல்வதுபோல.
நான் ஓர் இந்தியர்
நிறம் மிகவும் பழுப்பு
மலபாரில் பிறந்தவள்
பேசுகிறேன் மூன்று மொழிகளில்
எழுதுகிறேன் இரண்டில்
கனவில் ஆழ்கிறேன் ஒன்றில்.

அவர்கள் சொன்னார்கள்
‘ஆங்கிலத்தில் எழுதாதே
ஆங்கிலம் உனது தாய்மொழியன்று.’
என்னை ஏன் தனிமையில் விடக்கூடாது?
விமர்சகர்களே, நண்பர்களே, சந்திக்கவரும்சொந்தங்களே
உங்கள் ஒவ்வொருவரையும்தான் கேட்கிறேன்.
எனக்குப் பிடித்தமான எந்தவொரு மொழியிலும்
என்னைப் பேசவிடுங்களேன்.
நான் பேசுகிற மொழி எனதாகிறது.
அதன் பிறழ்வுகள், அசாதாரணப் பிரயோகங்கள் எல்லாம்
என்னுடையவை
என்னுடையவை மட்டுமே.
அது அரை ஆங்கிலம்
அரை இந்தியம்
ஒருவேளை நகைப்பிற்குரியதும்கூட.
ஆனாலும் அது நேர்மையானது
உங்களால் பார்க்கமுடியவில்லையா?
நான் எவ்வளவு மனுஷத்தனம் கொண்டவளோ
அவ்வளவு மனிதத்தன்மை அதற்குமிருக்கிறது.
அது பேசுகிறது
எனது குதூகலங்களை, எனது விழைவுகளை, எனதுநம்பிக்கைகளை.
அது எனக்குப் பயன்படுகிறது
காகத்திற்கு அதன் கரைதலைப் போல
சிங்கத்திற்கு அதன் கர்ஜனையைப் போல
அது மனிதப் பேச்சு
இங்கிருக்கிற, அங்கு இல்லாத மனத்தின் பேச்சு.
பார்க்கிற, கேட்கிற எல்லாம் அறிகிற ஒரு மனத்தின்பேச்சு.
செவியற்ற விழிகளற்ற பேச்சல்ல
புயலில் சிக்கிய மரங்களின் -
பருவமழையைச் சுமக்கும் மேகங்களின் -
மழையின் -
தொடர்பற்ற முணுமுணுப்புகளைச் செய்தவாறு
கொழுந்துவிட்டெரியும் சிதை நெருப்பின் பேச்சு அது.

நான் குழந்தையாக இருந்தேன்
பிறிதொருநாள் அவர்கள் சொன்னார்கள்
நான் வளர்ந்துவிட்டேனென்று
ஏனெனில் நான் உயரமாகிவிட்டேன்
எனது உடல் பெரிதாகிவிட்டது
ஒன்றிரண்டு இடங்களில் முடிவளரத்துவங்கிவிட்டது.
நான் காதலைக் கேட்டபோது
அவன் ஒரு பதினாறு வயது யௌவனத்தை
எனது படுக்கையறைக்குள் தள்ளிவிட்டுக் கதவைச்சாத்தினான்.
அவன் என்னை அடிக்கவில்லை
ஆனால் வருத்தமுற்ற என் பெண் மேனி
அடிவாங்கியதாக உணர்ந்தது.
எனது மார்பகங்களின் பளுவும், கருப்பையும்
அழுத்திய அழுத்தத்தில்
பரிதாபகரமாக நான் சுருங்கிப்போனேன்.
பிறகு ஒரு சட்டையையும்
எனது சகோதரனின் கால்சட்டையையும் அணிந்தேன்.
தலைமுடியைக் குட்டையாகக்கத்தரித்துக்கொண்டேன்.
எனது பெண்மையைப் புறக்கணித்தேன்.

அவர்கள் சொன்னார்கள்
சேலைகளை அணி
பெண்ணாய் இலட்சணமாய் இரு
மனைவியாய் இரு
தையல் வேலையைச் செய்துகொண்டிரு
சமையல்காரியாய் இரு
சண்டை போட்டுக்கொண்டிரு
வேலையாட்களுடன் பொருந்தி இரு
ஒட்டிக்கொண்டிரு
என்றனர் வகைப்படுத்துநர்கள்.
சுவரின் மீது உட்காராதே
மெல்லிய திரைச்சீலைகள் தொங்கும்
எங்கள் சன்னல்கள் வழியாகப் பார்க்காதே
ஆமியாய் இரு கமலாவாய் இரு
மாதவிக்குட்டியாய் இருந்தால் இன்னும் நல்லது.
இதுவே சரியான தருணம்
ஒரு பெயரைத் தேர்வுசெய்துகொள்ள.
கண்ணாமூச்சி விளையாட்டுக்கள் வேண்டாம்
மனநோயாளியோடு விளையாடாதே
திருப்தியுறாத ஆளாயிராதே
காதல் முறிவின்போது சங்கடப்படுத்தும்படி
ஓவென்று இரையாதே….

ஒரு மனிதனைச் சந்தித்தேன்
காதல்வயப்பட்டேன்
எந்தப் பெயரிட்டும் அழைக்கவேண்டாம் அவனை
ஒரு பெண்ணை நாடும் எவனோ ஒரு ஆண்தான் அவனும்.
காதலை நாடும் எவளோ ஒரு பெண்ணாகிய என்னைப்போலவே
அவனுள்…. நதிகளைப் போலவே ஒரு பசியின் வேகம்
என்னுள்…சமுத்திரங்களின் களைப்பில்லாதகாத்திருத்தல்.
உங்கள் ஒவ்வொருவரையும் கேட்கிறேன் “யார் நீ?”
“அது நானே”என்பதே விடை.
எங்கும் எல்லா இடங்களிலும் காண்கிறேன்
தன்னை நான் என்று அழைத்துக்கொள்பவரை.
உறைக்குள் செருகப்பட்டிருக்கும் வாளைப்போல்
இறுக்கமாக அவன் திணிக்கப்பட்டிருக்கிறான்
இந்த உலகத்தினுள்.

தனிமையில் குடிப்பது நான்தான்
புதிய நகரங்களின் விடுதிகளில்
நடுநிசி பன்னிரண்டு மணிக்குக் குடிப்பவள்நான்தான்.
பிறகு வெட்கத்திலாழ்ந்து செத்துக் கிடக்கிறேன்
தொண்டை விக்கி.
நான் ஒரு பாவி
நான் ஒரு ரிஷி
நேசிக்கப்படுபவள் நான்
வஞ்சிக்கப்படுபவளும் நான்தான்.
உங்களுக்கில்லாத குதூகலங்கள் எதுவும்எனக்குமில்லை
நானும் அழைத்துக்கொள்கிறேன் என்னை
நான் என்று.


Sunday, October 17, 2010

பித்த நிலத்தில் சிறகு விரிக்கும் கானகப்பட்சி




நானொரு நிலமற்றுத் திரியும் கானகப்பட்சி. இன்றிலிருந்து பின்னோக்கி என் பிறப்பு வரை ஒவ்வொரு கட்டத்திலும் என் தேவை நான் உட்பட எவருக்கும் தெரியாமலே போனது. அன்பு கிடைத்த போதும் அன்பு கிடைக்காதவளாக, உறவுகள் இருந்தும் யாருமற்றவளாக, நண்பர்கள் இருந்தும் நண்பர்கள் இல்லாதவளாக, மனிதர்கள் சூழ இருந்தும் தனிமையாகவே இருந்து வருகிறேன். அம்மா வீரம்மாள் மட்டுமே எனக்கு முழு அம்மாவாக அரவணைத்தாள், வெறும் பத்து வயது வரை. வெயிலும், மழையும் பல்லிளித்த ஒரு தீ தினத்தில் தாயும், தாய்பாசம் என்ற சொல்லும் என் அகராதியிலிருந்து உதிரம் சிந்த வேருடன் என்னிடமிருந்து பிடுங்கியெறியப்பட்டார்கள்.

இன்னொரு தாயான ராதாக்கா சில வருடங்களிலே இன்னொருவரின் மனைவியாக என்னிடமிருந்து பறிக்கப்பட்டாள். ஒரு சராசரி இந்திய ஏழை தலித் பெண்ணாக தன் இருப்பிற்காக போராடியே அவள் நேரம் வாதையுடன் கழிகிறது. இதில் எனக்கான இடம் அவள் கட்டளையை மீறி என்னிடமிருந்து பறிக்கப்பட்டது.

குடும்ப கட்டமைப்பிலிருந்து நீங்கிய பின் தனிமையே சுதந்திரமாகவும், சுதந்திரமே வெவ்வேறு அனுபவமாகவும், அனுபவம் பாடுகளாகவும், பாடுகளே வாழ்க்கையாகவும், வாழ்க்கையே துர்சொப்பனமாகவும் கழிந்தது. எப்போதும் அன்பை எதிர்பார்த்து ஏங்கும் எனக்கு நோய் தீர்க்கும் அருமருந்தாக உள்ளமும், உடலும் ஏற்கும் ஒரு சூரணம் நடிப்புக் கலை.

என்னளவில் நடிப்பென்பது உடலைவிட்டு பறவையாகப் பறந்து சிறகுகளால் என் வெற்றுடலை கைப்பாவையாக்கி வேறொரு உடலாக, பறவையாக, மிருகமாக, கீதமாக, போதையாக, நடனமாக உலுக்காட்டி உலுக்காட்டி கொண்டாடும் அருங்கலை. அதில் தான் தனிமை நீங்கி, பாடுகள் நீங்கி, உடல் என்னும் பொருளும் நீங்கி காற்றாய் மிதந்தலையும் அனுபவம் பெறுமுடியுமென நம்புகிறேன். இவ்வனுபவமே வலிநிரம்பிய வாழ்க்கையின் புறச்சிக்கலில் இருந்து என்னைக் காப்பாற்றுகிறது.

என் நடிப்பில் தனிச்சிறப்போ, பக்குவமோ இல்லாத போதும், நடிப்புக்கலை மட்டுமே என் ஆத்மாவைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை என்னுள் ஆழ தங்கிவிட்டது. நைந்த என் வாழ்க்கை குறிப்பில் நாடகத்துடன் உறவாடிய நாட்கள் பரிதாபமாக வெகு குறைந்த நாட்களே.

நடிப்பின் தீரா ஆசையில் எனக்கான நாடக வெளி தேடியலையும் என் கழுகுப் பார்வைக்கு முதல் தேர்வாக மயக்கும் மாந்திரீக நிலம் (ச.முருக)பூபதி அண்ணனின் பித்த நிலமே. அந்த வசீகர நிலவெளியில் என் உடல், எலும்பு, சதை, நாக்கு, விரலகளெல்லாம் அலைந்து அலைந்து வெறிகொண்டு பிரபஞ்ச நடனமாடத் துடிக்கிறது.

இது முதுகலை நாட்களில் ஆரம்பித்த வெறி. பூபதி அண்ணனின் நாடகத்தை நேரடியாக பார்த்திராத போதும், அவரது சரித்திரத்தின் அதீத மியூசியம் நாடகப் பிரதியை வாசித்த அனுபவமே என் நாடக உடலை பூபதி அண்ணனுக்கு அடிமையாக எழுதிக் கொடுத்துவிட போதுமானதாக இருந்தது. நண்பர்கள் விஜியும், முருகனும் அவரது கூந்தல் நகரம் நாடகத்தில் நடித்த அனுபங்களை பகிர்ந்து கொள்வது மேலும் வேட்கைக்கு எரியூட்டியது. ஆனால் சரியான சந்தர்ப்பம் மட்டும் வாய்க்கவேயில்லை.

தஞ்சை பல்லகலையில், முதுகலை படித்த நாட்களில் சாம்பான், நடுவன், கலக்காரர் தோழர் பெரியார் போன்ற நாடகங்களில் பங்கேற்க முடிந்தது. உடல் மீதான குழப்பத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆறுதலாக இருந்தது இத்தகைய நாடக அனுபவங்களே. நாடக வெளிக்கான ஆரம்பமாக அமைந்திருந்த அந்நாட்களில், எனக்கான உடலை மீட்டெடுக்கும் முயற்சியில் ஒரு வருடமும், உடலை திருத்தியபின் மேலும் நான்கு வருடங்களும் என் உலகம், நாடகம் மறுக்கப்பட்ட பாலையாக தகிக்க தகிக்க வெம்மிக்கொண்டிருந்தேன். மரணவாடை வீசிய அந்நாட்களில் எதற்கு, யாரை தண்டிப்பது என்ற குழப்பத்தில் புத்தக வாசிப்பு மறுத்து என்னையே தண்டித்துக் கொண்டேன் (வேறு சில காரணமும் உண்டு அல்லது வெறும் சமாதானமாகவும் இருக்கலாம்). காரணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தவறு எனது, தண்டனையும் எனக்கே, தவிப்பும் எனக்கே.

சில காலம் காதலும், சினிமாவும் ஓரளவு கைகொடுத்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் அவற்றோடு முழுமனதோடு பயணிக்க முடியவில்லை. நாடக வெளியன்றி வேறு எதுவும் என்னை காப்பாற்றாது என்பதை நான்கு வருட இடைவெளி தெளிவாக உணர்த்தியது. இப்பெரும் இடைவெளியில் மூச்சுத்திணறி தவிக்கும் மரணநொடிகளில் எங்கிருந்தோ வீரம்மாளே நாடக உருகொண்டு தாய்பால் பருகத்தந்து எனை மீட்டாள். சகோதரன் ஸ்ரீஜித்தின் என்.ராமயணம் வீதிநாடகமும், கவிதை வாசிப்பும், அன்பான அ.மங்கையின் பல்சான்றிரே மற்றும் யாது நம் ஊர் நாடக நிகழ்வும் இவ்விடைவெளியில் ஆசுவாசமளித்தது.

திரைத்துறையில் உதவி இயக்குநராக ஒப்பேற்றிக் கொண்டிருந்த நாளில், பூபதி அண்ணனிடமிருந்து நடிக்க ஒருமுறை அழைப்பு வந்தது. அப்போதோ என் சிறகுகள் இயக்குநர் மிஷ்கினின் வசமிருந்த மாரிக்காலம். சினிமா வேலை விஸ்வரூபமெடுத்து பெருஞ்சுவராய் என்னை சிறை பிடித்திருந்தது. உடலெங்கும் பரவும் நடுக்கத்துடன் பூபதி அண்ணனின் அழைப்பை மறுதலிக்கும் நாவினை சினிமா வளர்த்திருந்தது (இதே நாவால் எத்தனையோ முறை வெவ்வேறு காலகட்டத்தில் அண்ணனிடம் நடிக்க வாய்ப்பு கேட்ட நச்சரித்ததுண்டு). அடுத்த நாடகத்திலாவது நடிக்க வரவேண்டும் இல்லையென்றால் எப்போதும் அவர் நடிக்க முடியாது என்று சொல்லி வைத்து விட்டார். பெருங்குற்ற உணர்ச்சியுடன், இந்த பாரத்தை சுமந்தபடி பழைய சோர்வான வாழ்க்கை தொடர்ந்தது.

நந்தலாலா படம் முடிவடைந்த பிறகு அறுவை சிகிச்சை காரணமாக நீண்ட ஓய்விலிருந்தேன். அப்போது அடுத்த நாடகத்திற்கான அழைப்பு அண்ணனிடம் இருந்து வந்தது. திட்டவட்டமாக இன்ன நாள் ஒத்திகை துவங்கும் என தீர்மானமாகாத நிலையில் இந்தமுறை வாய்ப்பை விட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அதனாலேயே, உடல்நிலை தேறிய பிறகும், மீண்டும் சினிமாவின் புதிர்வட்டப்பாதைக்குள் நுழைய தயங்கி ஒதுங்கி நின்றேன்.

கிட்டத்திட்ட முழு வருடம் எந்த கணம் அண்ணன் கூப்பிட்டாலும், கிளம்பத் தயாராகவே காத்திருந்தேன். இடையில் நண்பன் ஸ்ரீஜித்தின் என்.ராமாயணம், ஒரு கவிதை வாசிப்பு மற்றும் அ.மங்கையின் பல்சான்றீரே’, ‘யாது நம் ஊர்’ ஆகிய நாடகங்களில் நடிக்க முடிந்தது மேலும் புதுரத்தம் பாய்ச்சி நம்பிக்கையுடன் காத்திருப்பை அர்த்தமாக்கியது ஒருவகையில் மிக ஆறுதலாக இருந்தது. எப்படியோ பொருளாதார சிக்கலையும் ஒருவாறாக சமாளித்து கோரப்பசியோடே காத்திருந்தேன்.





பல வருட தவப்பயனாக பூபதி அண்ணனில் நாடக நிலத்தில் கால் பதிக்கும் அரிய நாள் கடந்த மே மாத இறுதியில் அமைந்தது. சிலிர்ப்புடன் அந்த நொடிகளில் உடலின் மொத்த கணத்தை உணர்ந்தும், உடலை மறந்து இறகாகவும் பறந்தேன். கோவில்பட்டி, இந்திரா நகரிலுள்ள அந்தவீட்டை அடைந்த போது அமானுஷ்யமானதும், புராதனமுமான வனதேவதையின் கூட்டினை எட்டிப்பார்க்கும் சிலிர்ப்பு. மானசீகமாக மண்டியிட்டு ஒத்திகை நிலத்தை இதயக்கரம் கூப்பி மண்டியிட்டு வணங்கினேன். இதுவரை முட்டி முனகி ஒரு 6, 7 நாடகங்களில் நடித்திருந்த போதும், எப்போதும் என் மூளைக்குள் உதிக்காத மாண்பு கோவில்பட்டி நாடகநிலத்தில் என்னை மீறி இவ்வாறு கிளர்ந்தது.

ஒத்திகை நிலத்தில் அமர்ந்து இரண்டுமுறை ஒரேமூச்சில் ‘மிருக விதூஷகம்’ நாடகப் பிரதியை வாசித்து முடித்தேன். பிரமிப்பு மட்டும் இன்னும் நீங்கவில்லை. இது நானே தானா? எனக்கேதான் இது வாய்த்துவிட்டதா? நானே தான் பூபதி அண்ணனின் நாடகநிலத்தில் ஒரு நடிகையாகிவிட்டேனா? இவ்வொத்திகை நிலத்தில் நடிகை என்ற அங்கீகாரத்துடன் அமர்ந்திருக்கும் இவ்வுடல் எனதே தானா? இக்குறுகுறுப்புடனே முதல் ஒத்திகைக்காக காத்திருந்தேன்.

நாடகத்தில் நான் பங்கேற்கும் 2 காட்சிகள் நீங்கலாக மீதமுள்ள 11 காட்சிகளும் கடின ஒத்திகையுடன் முழுநாடக வடிவத்துடன் தயாராகவே இருந்தது. எனவே அன்று எனது முதல்நாள் ஒத்திகை எனக்கான ஒத்திகையாகவே இருந்தது.

எனது entry அரைமண்டியில் நடந்துவந்து 6 நிமிடங்கள் தொடர்ந்து அதே நிலையில் நிகழ்த்த வடிவமைக்கப்பட்டது. மனதிற்கு ஆசையாக இனிய சவாலாக இருந்த போதும், முழுவருடமும் கடின உழைப்பு மறந்த எனது ப்ரேத உடல், நிகழ்விற்கு ஒத்துழைக்க மறுத்து அடம்பிடித்தது. கால்வலியில் நிற்கவும் கூடாமல் உடல் தடுமாறத் துவங்கியது. சிலசமயம் நாடகத்தில் இது மாதிரியான தர்மசங்கடமான சூழலில் சமாளிக்கும் வல்லமை (will power) இயல்பாகவே வந்துவிடும். அப்படியொரு பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொள்ளும் சக்திகூட இன்றி பாதியில் கைவிடுமாறு என் நிலை இருந்தது.

உடல் ஒத்துழைக்க மறுத்ததைவிட பூபதி அண்ணனுக்கு என் மேல் அதிருப்தி வந்துவிடுமோ என்ற பயம் (இதையெல்லாம் கடந்த ஓர் உன்னதமான இடத்தில் அவர் இருக்கிறார் என்பதை பின்னாளில் உணர்ந்து கொண்டேன்). இயலாமையும், அலைக்கழிப்பிற்கும் என்னை தின்னக்கொடுத்து தள்ளிநின்றேன். முதுகலை வருடங்களில் நல்ல நணபனாய் இருந்த விஜி இந்நாடகத்தில் இருந்தான். பூபதி அண்ணனுடைய பிரதியில் இது அவனுக்கு 7வது நாடக அனுபவம். நான் வந்து சேர்த்த நாளில் வேறொரு நாடகத்திற்காக தவிர்க்க முடியாத சூழலில் தஞ்சையிலிருந்தான். அவனிடம் தொலைபேசியில் இயலாமையை பகிர்ந்து கொண்டது கொஞ்சம் உதவியது.

சில நாட்கள் தொடர் ஒத்திக்கைப்பிறகு கொஞ்சம் உடல் பழகிவிட்டாலும் சரியான நடிப்பை கொடுக்கமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். விஜி திரும்பி வந்தது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. எனக்கிருந்து வெகு குறைந்த நல்ல நட்பில் விஜி தவிர்க்க முடியாத சகோதரன். ஆனால், சென்னை வந்தபின் எல்லாம் தொலைவோடிப்போனது. இந்த ஒத்திகை சமயங்களில் இடைப்பட்ட வருடத்தில் இழந்த நட்பின் நேசத்தையும், பகிர்வையும் தக்க வைத்துக் கொண்ட கணத்தை கண்ணீருடன் தரிசிக்க முடிந்ததில் மகிழ்ச்சியே.

நாளுக்குள் நாள் மனச்சோர்விற்கு ஆளாகி என்னால் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை இழந்துவிட்டேன். என் இருப்பின் மேல் வெறுப்புற்று தவித்தேன். அப்படி செய், இப்படி செய்யாதே என எதாவது சொல்லி சரிசெய்வார் என்று எதிர்பார்த்த பூபதி அண்ணனும் கருணை மறுத்து என்னிடம் தொடர்ந்து மவுனியாக இருந்தார். என் வேதனையும், ஆற்றாமையுமே என்னை சரிசெய்துவிடுமென தீவிரமாக அவர் நம்பியிருக்கக் கூடும். அலைக்கழிப்பும், நடுக்கமும் நாடகநிலத்தின் முன் என்னை ஒப்புக்கொடுத்து தொடர்ந்து மன்றாடச் செய்தது.

உள்ளதே ஒழுங்காக செய்ய முடியாத நிலையில் நாடகத்தில் எனக்கு அதிக வேலையில்லை என்ற வருத்தம் ஒரு பக்கம் உறுத்திக்கொண்டேயிருந்தது. மரபான நாட்டியக் கலையில் நவீனத்தை இணைத்து உடல்களை உடலிகளாக மேடையில் புகுத்தி வலிமையான, அழகான நடனக்கலையை வளர்ததவர் மறைந்த சந்திரலேகா. நாடக நிலத்தில் ஆண்/பெண் என்ற பார்வை உடைந்து வெறும் உடலியாக மட்டுமே பார்க்கப்பட வேண்டுமென்பது என் ஆசை. பூபதி அண்ணனுக்கும் இதே நிலைப்பாடுதான் என்பதை அறிவேன். இந்த எதிர்ப்பார்ப்போடு இருந்த எனக்கு சக நடிகர்களோடு சக உடலியாக ஊடாடும் வாய்ப்பில்லாதது சற்று ஏமாற்றமாகவெ இருந்தது. எனது பகுதியே கிட்டத்தட்ட solo performance போல் தனித்து விடப்பட்டது எனது தேடலுக்கு போதுமானதாக இருக்கவில்லை. அ.மங்கை “நடிப்பு என்பது பார்வையாளர்களுக்காக கிடையாது, சக நடிகர்களுக்காக” என்று சொல்வதுண்டு். ஒருவேளை அப்படியொரு சக நடிப்பு உடலுடன் ஊடாடும் வாய்ப்பில்லாததே எனக்கு தொந்தரவாக இருந்திருக்குமென நினைக்கிறேன்.




நிம்மதியிழந்த எனதாத்மாவும் விஜியின் நட்பும், ஓவியர் பேய்காமனின் அறிமுகமும் கொஞ்சம் அருள் தந்து காப்பாற்றியது. விஜி மற்றும் பேய்க்காமனின் வழியாக நிலம் என்னிடம் கோபம் காட்டி, அன்பு கூட்டி மெல்ல மெல்ல நாடக வெளியில் என்னை சரிசெய்தது.

எனது கல்லூரி நாட்களின் போது அண்ணன் தனது உறவினர் மகள்கள் இருவரை ஒவ்வொரு வயதிலுமாக குழந்தை பருவம் முதல் புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தியதை அறிவேன். அதில் சில புகைப்படங்களையும் நான் பார்த்தது வியந்ததுண்டு. அதனாலேயே குறிப்பிட்ட அவ்விரு சிறுமிகள் மீது ஒரு தனிப்பாசம் இருந்தது. அந்த புகைப்படத்தில் மலர்ந்த குட்டி தேவதைகளில் ஒருவர் ப்ரியா இன்று கல்லூரி மாணவி. அவரும் அவரது சகோதரி சத்யா இருவரும் (பூபதி அண்ணனின் அக்கா குழந்தைகள்) நடிகர்களுக்கு சமையல் செய்வதற்காக தினமும் வருவார்கள். பாசமும், இளகிய மனசும் அந்த வீட்டுப் பெண்களின் குடும்பச்சொத்துப் போல. அழகான பெண்கள், அவர்களுடன் கொஞ்ச நேரம் புழங்க முடிந்தது 15 ஆண் நடிகர்கள் மத்தியில் ஒற்றை பெண்ணாக இருந்த என் தனிமைக்கு தேவையாய் இருந்தது.

நாடக அரங்கேற்றத்திற்கு இறுதி ஒரு வாரம் முன்பு, குறுமலை கிராமத்தில் ஒரு புராதன அய்யனார் கோயிலில் தேசாந்திரிகளாக தங்கியிருந்து ஒத்திகை பார்த்தோம். தமிழக பெண்களுக்கு எளிதில் கிடைத்து விட முடியாது அற்புத அனுபவம். விழுது தொங்கும் ஆலமரங்கள் (எனது முதல் வசனத்தின் ஒரு பகுதியும் கூட) சூழ நடுவில் ஒத்திகை நிலம் அமைத்து மயிலும், நாயும், மாடும், இன்ன பிற பட்சிக்கூட்டத்திற்கும், பூச்சி இனத்திற்கும் மத்தியில், அவர்கள் நிலத்தில் நாடகம் பழகி்னோம். இயற்கையோடு இணைந்து வாழ்ந்த அந்த வாழ்க்கையில் பெண்ணான எனக்கு சில அசௌகர்யங்கள் இல்லாமலும் இல்லை.

வழக்கமாக காலை வெயில் வருமுன் ஒரு ஒத்திகை, மாலை இருள் வருவதற்கு முன்பு ஒரு ஒத்திகை பார்ப்பது எங்கள் வழக்கம். நிலத்தில் ஒத்திகை முடிந்ததும் அசதியும், புழுதியுமாக உடல் புழுங்கிக் கொண்டிருக்கும். குளிப்பதற்கு அங்கே அறை வசதி கிடையாது. நாங்கள் தங்கியிருந்த கோயிலுக்கும், நாடக நிலத்திற்கும் நடுவில் அழகான, அளவான தாமரைக் குளமொன்று கம்பீரமாக இருந்தது. ஒத்திகை முடிந்ததும் நடிகர்கள் அனைவரும் குளிக்க அங்கே சென்றுவிடுவார்கள். அந்த திறந்தவெளியில் என்னால் குளிக்க முடியாது. எனவே அதே அசதியோடும், வியர்வையோடும் மாலை ஒத்திகையையும் முடித்துவிட்டு, மீண்டும் நடிகர்கள் குளிக்க காத்திருப்பேன். கடின உழைப்பிற்கு பிறகு குதூகலமாய் குளித்ததில் நீந்திக் குளிக்கும் யாருக்குத்தான் வெளியேற மனம் வரும்.

நல்ல கும்மிருட்டில் 8 மணி சுமாரில் நண்பர்கள், விஜி மற்றும் பேய் காமன் காவல் தெய்வங்களாய் குளக்கரையில் இசையுடன் அளவளாவிக் கொண்டிருக்க நான் அரைகுறையாக குளித்துக் கொள்வேன். அந்தக் குளத்திற்கு மேலும் இரண்டு கரைகள் இருந்ததால் பதற்றத்துடனே அவசர அவசரமாக துவைத்துக் குளித்து கரையேர வேண்டியிருக்கும். மாலதி மைத்ரியின் கவிதை ஒன்றில் ஒரு பெண்ணுடல் கிராம மனிதர்கள் அனைவரும் திருவிழா கொண்டாட்டத்திற்காக கோயிலில் குழுமியிருக்க, ஆளரவமற்ற ஊர்க்குளத்தில் அந்த பெண்ணுடல் முதன்முதலாக நிர்வாணமாக குளிக்கும் அனுபவத்தை எழுதியிருப்பார். ஒவ்வொரு இரவு குளியலிலும் அந்த கவிதை மட்டும் எனக்கு துணையாக என்னுடன் அமைதியாக குளித்துக் கொண்டிருந்தது. இது போன்ற சிறுசிறு பெண்ணுடல் சார்ந்த புறச்சிக்கல்கள் சில இருந்த போதும், விஜி மற்றும் பேய்க்காமனின் நட்பின் நேசக்கரம் அந்த இயற்கை சூழலையும், நாடக வெளியையும் ரசிக்க உதவியது மறக்க முடியாதது.

****

எது போதவில்லை, எது குறைகிறது என்று புரியாமலேயே மதுரை நிகழ்விற்கு சக நடிகர்களுடன் தயாரானேன். நாடக உடையும், இசையும், ஒளியும், காலகாலமாக கலைஞர்களின் வேர்வை பாவிய காந்தி ம்யூசியத்தின் திறந்த வெளி அரங்கமும் அவற்றிற்கேயுரிய இயல்புடன், ஒரு நடிகையாக என்னைத் தாங்க கொஞ்சம் ஒப்பேற்றினேன். தொடர்ந்து திருவண்ணாமலை நிகழ்வுகளிலும் அதே நிலை. என் உடல் மட்டுமன்றி என் குரலும் ஆரம்பம் முதல் எனக்கு தொடர்ந்து பாதகமாகவே இருந்து படுத்தியது. இன்னமும் நாடகத்தை புரிந்து கொள்ளமுடியாத எனக்கு சென்னை, ஸ்பேசஸ் அரங்கம் மேலும் என் சவாலை சிக்கலாக்கியது.

நாட்டிய தேவதை சந்திரலேகாவின் அபிநயங்களும், பாதமும் பரவிய அந்த வளாகமும், தன்னிகரல்லா அக்கலைமகளின் மூச்சும், பயிற்சியும் தங்கிவிட்ட ஸ்பேசஸ் மேடையும் எனக்கு பலநாள் ஆதர்ஷ நிலம். ஏற்கனவே அந்நிலத்தில் ஸ்ரீஜித் புண்ணியத்தில் ஒருமுறை கால்பதித்திருந்த போதும். இது special. சந்திரலேகாவின் மேடையில், பூபதி அண்ணனின் நாடகம், அதில்நான் நடிகை என்பது எப்பேர்ப்பட்ட விடுதலையுணர்விற்கும் இணையானது.

முந்தைய நிகழ்வுகளை விட கூடுதல் சிறப்பாக இந்த நாடக நிலத்தில் மறைந்த சந்திரலேகாவும் ஆலமரமாய் விழுது தொங்க எங்களுடன் நிகழ்வில் பங்கேற்றார். அம்மூதாயின் அரவணைப்பு எல்லா நடிகர்களுக்கும் கிடைத்ததைப் போலவே பாரபட்சமின்றி எனக்கும் கிடைத்தது. எந்த சிக்கலும் இன்றி என் பணியை அவள் பார்வையில் செய்து முடித்தேன்.

கிட்டத்தட்ட ஒரு மாதம் முழுதும் பூபதி அண்ணனின் நிழலில் கோணங்கி அண்ணனின் பார்வையில் விஜி-பேய்காமனின் நட்பில் சக நடிகர்களின் அருகாமையில் இருந்தது, கோவில்பட்டி முதல் குறுமலை, மதுரை, திருவண்ணாமலை, சென்னை வரை பயணம் செய்து நாடகம் செய்தது இத்தனை வருட காத்திருப்பின் பலனாக இருந்தது. எல்லாம் முடிந்து வீடு திரும்பும் போது மனதிற்குள் ஏதோவொரு குறை அரித்துக்கொண்டிருக்க அயர்ச்சியுடனே நாடக வெளிக்கு மனமின்றி விடைகொடுத்தேன்.

சென்னை வீட்டிற்கு திரும்பிவந்த பின்புதான் எனக்கு உண்மையான நடிப்பு தாகமே ஆரம்பித்தாகவே உணர்கிறேன். ஒரு மாத ஒத்திகை, சக நடிகர்களின் சுவாசம், உழைப்பு, நட்பு, கோணங்கி அண்ணன், அப்பா, ப்ரியா-சத்யா, கோடங்கி அண்ணன், விஜி, பேய்க்காமன் எல்லாமே நாளுக்கு நாள் ஏக்கத்தையே தொடர்ந்து விதைத்துக் கொண்டிருந்தன. வீட்டில் இருப்புக் கொள்ளாமல் கொஞ்சம் ஓவிய வெளியில் பயணம் செய்து என் ஆவலை அடக்கிக் கொண்டிருந்தேன்.

மீண்டும் பாண்டிச்சேரி நாடக நிகழ்விற்காக கோவில்பட்டி சென்ற போது தான் மீண்டு வந்ததாக உணர்ந்தேன். இந்த முறையும் ஒத்திகையில் அதிக ஆற்றலுடன் உழைக்க முடியாத போதும் பழைய ஆற்றாமையோ பயமோ என்னிடம் இல்லாதது ஆச்சர்யமாக இருந்தது. ஏதோவொரு உந்து சக்தி எனக்கு நம்பிக்கை கொடுத்ததை இந்தமுறை தீர்க்கமாக உணரமுடிந்தது. ஒத்திகை முடிந்து புதுவையில் எங்கள் நாடக மேடையை அடைந்த போதும் கூட வழக்கமாக அரங்கேற்றத்தின் போது நம்பிக்கையின்மையால் ஏற்படும் நடுக்கம் இந்த முறை அறவே இல்லாமல் இருந்தது.

இந்த முறை நிகழ்விற்கு முன்பு நாடக நடிகர்களுக்கு செம்மண் குழைத்து உடலிலெங்கும் அரிதாரம் பூசுவதாக ஏற்பாடாகியிருந்தது. நடிகர்களுக்கு மட்டும். எனக்குரிய costume போட்டு தயாராகி நிற்கிறேன் புதிதாக ஒன்று என்னை தொந்தரவு செய்கிறது. ஏன் இது நடிகர்களுக்கு மட்டும் என்று கேள்வி, சரி பிரதியின்படி அவர்கள் கோமாளிகள் அவர்களுக்கு அரிதாரம் தேவை அது செம்மண்ணிலிருந்து எடுக்கப்படுகிறது எனது பாத்திரத்திற்கு அது அவசியம் இல்லாமல் இருக்கலாம் என்று சுயசமாதானம் செய்து கொள்கிறேன். ஆனாலும் இருப்பு கொள்ளவில்லை.

வழக்கமாக எனது காட்சி வரும் வரையிலும் எனக்கு சில பின்னரங்க பணிகளிருக்கும். நாடகம் துவங்கி 4 காட்சிகள் முடிந்து விட்டது, இன்னும் இரண்டு காட்சிகள் கழித்து எனக்கு வேலை நேரம் வந்துவிடும். அந்த செம்மண் குழைவின் நினைவு என்னை ஆக்கிரமித்து தொந்தரவு செய்து கொண்டேயிருக்கிறது. அண்ண்னிடம் அனுமதி கேட்டு நானும் செம்மண் பூசிக்கொள்ளலாமா (கேட்பது சரியா என்ற குழப்பம்), அப்படியே கேட்க நினைத்தாலும் அதற்கான சூழலுமில்லை.

எதையும் யோசிக்காமல் அந்த பின்னரங்க இருளில் செம்மண் குழவை இருந்த பாத்திரத்தைத் தேடி கால்களிலும், கைகளிலும் சிறு சிறு வரிகளிட்ட பின் தான் ஒருவாறு மனக்குதிரை ஓய்ந்து நின்றது. இப்போது என் காட்சிக்கான நேரம் (Its show time babe; and I did it). என்னை நானே வியந்து கொண்டிருந்தேன். வழக்கமாக நான் செய்யும் movements தான் ஆனால் இம்முறை உயிர்ப்புடன் இருந்தது. அதன் பிரதிபலிப்பை பார்வையாளர்களிடம் காண முடிந்தது. நான்கு அரங்கேற்றத்தில் முதல்முறையாக நான் மேடையில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் போது பார்வையாளர்களிடமிருந்து கைதட்டல் என்னால் இதயத்தை வருடுகிறது. இறுதி காட்சியிலும் நாடகநிலத்தில் நின்று உயிர்ப்புடன், உத்வேகத்துடன் எனது பணியை செய்து கொண்டிருந்தேன். அப்பாடா, இதைத்தான் இந்த அனுபவத்தை தான் இத்தனை காலம் தேடிக்கொண்டிருந்தேன். நாடகம் முடிந்து பார்வையாளர்கள் பாராட்டிய போது வழக்கமான குற்றவுணர்வின்றி பெருமிதம் இருந்தது. இந்தமுறை அனைவரும் என் குரலையும் சிறப்பாக, boldஆக இருந்ததாக சொன்னதும் உண்மையிலேயே சந்தோசமாகத்தான் இருந்தது.

எல்லாம் முடிந்து் வெளியேறாத கண்ணீருடன் நண்பர்கள் விஜி மற்றும் பேய்க்காமனின் ஆதரவான அரவணைப்பிற்காக காத்திருந்து.., காத்திருந்தேன். வழக்கமாக என்னை அதிகம் விமர்சிப்பதும், அதிகம் ஊக்குவிப்பதும் இவ்விருவரே. இம்முறை வழக்கத்திற்கு மாறாக சிறப்பாக செய்ததாக உணர்கிறேன் ஆனால், எப்போதும் நிகழ்வு முடிந்ததும் அரவணைத்து வாழ்த்து சொல்லும் இருவரும் இம்முறை அவரவர் வேலையை பார்த்துக் கொண்டு சக நடிகர்களுக்கு மட்டும் வெற்றியை பரிமாறிக்கொண்டிருந்தது பெருத்த ஏமாற்றமாக இருந்தது.



நிகழ்வு முடிந்து வழக்கமாக செய்து முடிக்கும் வேலைகளை ஒருங்கு செய்துவிட்டு தனியாக ஒரிடத்தில் அமர்ந்து மானசீகமாக பலருக்கு நன்றியை பரிமாறிக்கொண்டிருந்தேன். அந்த பட்டியலில் கோவில்பட்டி மற்றும் குறுமலை நாடக நிலம், பூபதி அண்ணன், கோணங்கி அண்ணன், விஜி, பேய்க்காமன், சக நடிகர்கள், சத்யா, ப்ரியா, என் அம்மா வீரம்மாள், அக்கா ராதா, நண்பர் ரூபன் பால் நத்தானியல், என்னுடல், என் கண்ணீர், என் வலிகள் எல்லாமே அடங்கும். முதன்முறையாக தன் கன்னித்தன்மைக்கு விடைகொடுக்கும் பெண் தன் உடலின் பரிபூரணத்தை உணரும் திருப்தியையும், மனஅமைதியையும் அன்றைய நாடக நிகழ்வு முடிந்த போது நானடைந்தேன். இன்னும் அந்த சாந்தம் என்னுள் ஒட்டிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன்.

இறுதியாக பூபதி அண்ணனின் பித்த நிலம் எனக்கு துடிவரம் தந்துவிட்டதாக உணர்கிறேன். இனி வெறிகொண்டு் வாசிக்கவும், கலைக்குள் இயங்கவும் தீர்மானித்துள்ளேன். அற்பக் காரணங்களுக்கெல்லாம் தளர்வடைந்து போகும் இயல்புடைய எனக்கு இப்பித்தநிலம் மீட்டுத்தந்த சகோதர நேசமும், நட்பின் உத்வேகமும், காதலின் வனப்பூவும் தொடர்ந்து உற்சாகமும் உந்துதலும் தந்துகாக்க வேண்டுமென்று பிரபஞ்ச நாடக நிலத்தை வேண்டிக்கொள்கிறேன்.

நன்றி: லிவிங் ஸ்மைல் வித்யா